நெருப்பு நெருங்காத மரம்

காட்டுத் தீ பரவும் போது செடி, கொடி, மரங்கள் என சுற்றியிருக்கும்

எதனையும் விட்டு-வைப்பதில்லை என்று கேள்விப்பட்டுள்ளோம். ஆனால்,

நெருப்பினைத் தன்னருகில் வரவிடாமல் தடுத்து நிறுத்தும் தன்மை 

அமையப்பெற்ற மரங்கள் இந்தியாவின் இமயமலைத் தொடர்களிலும் 

மேற்குத் தொடர்ச்சி மலைகளிலும் காணப்படுகின்றன.



ரொடோடென்ரன் (Rhododendran) என்ற-ழைக்கப்படும் இந்த மரத்தின் அருகில் 


நெருப்பு சென்றால், பல அடுக்குகளாக அமைந்துள்ள இதன் 

பட்டைகளிலிருந்து நீர் வடியத் தொடங்கி-விடும். இதனால் இம்மரத்திற்கு 

நெருப்பினால் அழிவு ஏற்படாது.

பரந்த புல்வெளியில் செந்நிறப் பூக்களுடன் காட்சிதரும் இம்மரங்கள் 


பறவைகளைக் கவர்ந்திழுத்து, பெரும்பாலான பறவைகளின் 

வாசஸ்தலமாக 

விளக்குகின்றன. பலத்த காற்றி-னையும் தாங்கக் கூடிய உறுதி 

படைத்தனவாகவும் திகழ்கின்றன. இம்மரத்தில் காணப்படும் செந்நிற 


மலர்களிலிருந்து தயாரிக்கப்படும் சாறு மருத்துவத் தன்மை கொண்டது.

தமிழில் காட்டுப் பூவரசு எனவும் நீலகிரியில் படுகர் மொழியில் பில்லி 


எனவும் அழைக்கப்-படுகிறது. இம் மலர்கள் போரஸ் என்று பூர்வீகக் 

 குடிகளான தோடர் இனத்தவரால் அழைக்கப்-படுகின்றன. மேற்குத் 

தொடர்ச்சி மலைப்பகுதி-களில் (நீலகிரி, ஆனைமலை, பழனி, மேகமலை)

 கடல் மட்டத்திற்கு மேலே 1500 மீட்டர் உயரத்-திற்கும் அதிகமான 

பகுதிகளில் இம்மரங்கள் வளர்ந்-துள்ளன. நீலகிரியின் பூர்வீக மரங்கள் 

என்றும் இதனை அழைக்கலாம்.

இந்தியாவைத் தவிர இலங்கை, நேபாளம், மியான்மர், சீனா, தாய்லாந்து


ஆகிய நாடுகளிலும் ரொடோடென்ரன் மரங்கள் காணப்படுகின்றன.

 

Search: Tree which cannot catch fire, நெருப்பு நெருங்காத மரம்