"நட்புக் கவிதைகள்"

நட்புக்கு கூட கற்புகள் உண்டு நல்லா தெரிஞ்சுக்கடா !

ஒன்பதரை மணி காலேஜிக்கு
ஒவ்வொருத்தனா கெளம்பும் போது
ஒருத்தன் மட்டும் தூங்கிகிட்டிருப்பான்
ஒன்பது இருபது ஆகுற வரைக்கும் .. .

அடிச்சி புடிச்சி கெளம்புறப்போ
அரை குறையா குளிச்சதுண்டு
பத்து நிமிஷ பந்தயத்துல
பட படன்னு சாப்டதுண்டு

பதட்டதோட சாப்பிட்டாலும்
பந்தயத்துல தோத்ததில்ல ,
லேட்டா வர்ற நண்பனுக்கு
பார்சல் மட்டும் மறந்ததில்ல !

விறுவிறுன்னு நடந்து வந்து
காலேஜ் Gate நெருங்குறப்போ
‘ வெறுப்படிக்கிதுடா மச்சான் ‘ னு
ஒருத்தன் பொலம்பி தொலச்சாக்கா ,

வேற எதுவும் யோசிக்காம
வேகவேகமா திரும்பிடுவோம்
வெட்டியா ரூம்ல அரட்டை அடிக்க ,
இல்ல ‘ மனிஸ் ‘ தியேட்டர்ல படம் பாக்க !

‘ கஷ்டப்பட்டு ‘ காலேஜிக்கு போனா
கடங்கார professor கழுத்தறுப்பான் .. .
assignment எழுதாத பாவத்துக்கு
நாள் முழுக்க நிக்கவச்சி தாக்கறுப்பான் !

கேலி கிண்டல் பஞ்சமில்ல ,
கூத்து கும்மாள குறையுமில்ல ,
எல்லாருக்கும் சேத்துதான் punishment ன்னா
H.O.D ய கூட விட்டதில்ல !

ஈ அடிச்சான் காபி இந்தபக்கம்னா
அத அடிப்பான் காபி அந்தபக்கம் …
ஒருத்தன் மட்டும் படிச்சிட்டு வந்து
ஒன்பதுபேர் பாஸ் ஆனதுண்டு !

பசியில யாரும் தவிச்சதில்ல
காரணம் - தவிக்க விட்டதில்ல .. .
டீக்கடையில கடன்வச்சி குடிச்சாலும்
சரக்கடிக்க பஞ்சமே வந்ததில்ல !

அம்மா ஆசையா போட்ட செயினும்
மாமா முறையா போட்ட மோதிரமும்
fees கட்ட முடியாத நண்பனுக்காக
அடகு கடை படியேற அழுததில்ல …

சட்டைய மாத்தி போட்டுக்குவோம்
சாதி சமயம் பாத்ததில்ல ,
மூஞ்சிமேல காலபோட்டு தூங்கினாலும்
முகவரி என்னன்னு கேட்டதில்ல !

படிச்சாலும் படிக்கலன்னாலும்
பிரிச்சி வச்சி பாத்ததில்ல .. .
அரியர்ஸ் வெச்சாலும் வெக்கலன்னாலும்
அந்தஸ்த்து பாத்த ஞாபகமில்ல !

வேல தேடி அலையுறப்போ
வேதனைய பாத்துப்புட்டோம்
‘ வெட்டி ஆபிஸர் ‘ னு நெஜமாவே
மாறி மாறி சிரிச்சிகிட்டோம் !

ஒருத்தன் மட்டும் சம்பாதிக்க ஆரம்பிச்சு
ஒன்பது பேரும் உக்காந்து சாப்பிட்டப்போ
மனசு கட்டபொம்மனா நண்பனுக்கு நன்றி சொல்ல
கண்ணு எட்டப்பனா கண்ணீர் சிந்தி காட்டி குடுக்கும் .. .

பக்குவமா இத கண்டும் காணாம
நண்பன் தட்டி கொடுக்க நெனைக்கிறப்போ
‘ சாப்பாட்ல காரம்டா மச்சான் ‘ னு
சமாளிச்சி எழுந்து போவோம் .. .

நாட்கள் நகர ,
வருஷங்கள் ஓடுது ,
எப்போதாவது மட்டுந்தான் இ - மெயிலும் வருகுது
“Hi da machan… how are you?” வுன்னு .. .

தங்கச்சி கல்யாணம் ,
தம்பி காலேஜி ,
அக்காவோட சீமந்தம் ,
அம்மாவோட ஆஸ்த்துமா ,
personal loan interest,
housing loan EMI,
share market சருக்கல் ,
appraisal டென்ஷன் ,

இந்த கொடுமையெல்லாம் பத்தா
‘ இன்னிக்காவது பேச மாட்டாளா ?’ ன்னு
இஞ்சிமறப்பா போல ஒரு காதல் ,

.

.

.

எப்படியோ வாழ்க்க ஓடுது ஏடாகூடமா ,
நேரம் பாக்க நேரமில்ல போதாகாலமா !
இ - மெயில் இருந்தாலும்
இண்டர்னெட் இருந்தாலும்
கம்பெனியில ஓசி phone இருந்தாலும்
கையில calling card இருந்தாலும்
நேரம் மட்டும் கெடைக்கிறதில்ல

நண்பனோட குரல கேக்க
நெனச்சாலும் முடியறதில்ல
பழையபடி வாழ்ந்து பாக்க !
அலைபேசி இருந்தும் அழைக்க முடியாம போனாலும்

orkut இருந்தும் scrap பன்ன முடியாம போனாலும்
‘available’ ன்னு தெரிஞ்சும் chat பன்ன முடியாம போனாலும்
‘ ஏண்டா பேசல ?’ ன்னு கோச்சிக்க தெரியல . .

இத பெரிய பிரச்சனையா யோசிக்கவும் முடியல !

தேசம் கடந்து போனாலும்
பாசம் மறந்து போகாது !
பேசக் கூட மறந்தாலும்
வாசம் மாறி போகாது !

வருஷம் பல கழிஞ்சாலும்
வரவேற்பு குறையாது !
வசதி வாய்ப்பு வந்தாலும்
‘ மாமா ‘ ‘ மச்சான் ‘ மாறாது !


நன்றி